Friday, July 3, 2015

குரான் ஷரீஃப் 12. ஸூரா யூசுஃப் - 24வது வாக்கியம் (படித்தது கேட்டதிலிருந்து புரிந்து கொண்டது)

12. ஸூரத்து யூஸூஃப்
24 வது வாக்கியம்

وَلَقَدْ هَمَّتْ بِهِ ۖ وَهَمَّ بِهَا لَوْلَا أَن رَّأَىٰ بُرْهَانَ رَبِّهِ ۚ كَذَٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ ۚ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ

டாக்டர் முஹம்மது ஜானின் தமிழாக்கம்:
நன்றி: http://www.tamililquran.com/qurandisp.php?start=12

ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தை கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.

உலக அறிஞரின் தமிழாக்கம்:
நன்றி: http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thaw…/…/yusuf/…
24. அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்).229 இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர்.

இப்பொழுது வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பை கவனிப்போம்:
வலகத் - And Certainly - அத்துடன் நிச்சயமாக
ஹம்மத் - She did desire - அவள் விருப்பம் கொண்டாள்
பிஹி - him - அவர் மீது
வஹம்ம - and he would have desired - அவரும் விரும்பம் கொண்டே இருந்திருப்பார்
பிஹா - her, - அவள் மீது
லவ்லா - if not - இப்படி நடக்கவில்லையெனில்
அன் - that he - அதாவது அவர்
ரஆ - saw - பார்த்தார்
புர்ஹான - the proof - ஆதாரத்தை
ரப்பிஹி - (of) his Lord. - அவருடைய இறைவனிடமிருந்து
கதாலிக - Thus, - இப்படியாகத்தான்
லிநஸ்ரிஃப - that, We might avert - நாம் விலக்கிவிட்டோம்
அன்ஹு - from him - அவரிடமிருந்து
அஸ்ஸுவஅ - the evil - தீயவைகளை
வஉல்ஃபஹ்ஸாஅ - and the immorality. - மானக்கேடான செயல்களை
இன்னஹு - Indeed, he - நிச்சயமாக, அவர்
மின் - (was) of - இல் (இந்த வார்த்தையை அடுத்த வார்த்தையோடு சேர்த்து படிக்க வேண்டும் - அதாவது ”நம்முடைய அடியார்களில்”)
இபாதினா - Our slaves - நம்முடைய அடியார்கள்
ல்-முஹ்லஸீன் - the sincere - உண்மையானவர் / நேர்மையானவர்

மேலே உள்ள உலக அறிஞரின் தமிழாக்கத்தில் ”அவள் அவரை நாடினாள், அவரும் அவளை நாடி விட்டார்..” என்று எழுதப்பட்டுள்ளது. இப்படி மொழி தமிழாக்கம் செய்வதன் மூலமாக இந்த உலக புத்திசாலி என்ன நிறுவ விரும்புகிறார் என்றால், யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் சபலம் இருந்துள்ளது என்று தான். நஊதுபில்லாஹி..

அல்லாஹ் மிக அழகாக இந்த வார்த்தைகளை அமைத்து இருக்கிறான்.
நிச்சயமாக அவள் விருப்பம் கொண்டாள் என்று முதலில் சொல்கிறான்...
அடுத்து “வ” என்ற அரபி வார்த்தையை பயன்படுத்துகிறான்.
”வ” என்றால் ஆங்கிலத்தில் "and" என்று சொல்கிறோமே அதே போல் அரபியில் உள்ள இணைப்பு வார்த்தை..
ஒரு உதாரணம் சொல்கிறேன்..
ஆண் பெண் இரண்டு பேர் இட்லி சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்..
அரபியிலும் சரி ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி, ”பெண் இட்லி சாப்பிட்டார் ஆணும் இட்லி சாப்பிட்டார்” என்று எழுத தேவையில்லை.. ஒரே வார்த்தையில் “இருவரும் இட்லி சாப்பிட்டார்கள்” என்று சொல்லிவிடலாம்.
"She ate idly and he ate idly" என்று "and"ஐ பயன்படுத்தி எழுத தேவையில்லை, ஒரே வார்த்தையில், "Both of them ate idly" என்று சொல்லிவிடலாம். "and" என்ற வார்த்தையே தேவையில்லை.
இன்னொரு உதாரணம் - இப்படி வைத்துக் கொள்ளுங்கள், ஒருவர் இட்லி சாப்பிடுகிறார், இன்னொருவர் தோசை சாப்பிடுகிறார் என்று. அப்பொழுது தமிழில் பிரித்து தான் சொல்ல வேண்டும். அதே போல ஆங்கிலத்தில் "and" பயன்படுத்தி தான் எழுத வேண்டும்.

“பெண் இட்லி சாப்பிட்டார் ஆண் தோசை சாப்பிட்டார்” என்று தமிழிலும் "She ate idly and he ate dosai" என்று "and"ஐ பயன்படுத்தி தான் எழுத வேண்டும்.

இப்போ இங்கே படித்து பாருங்கள்..
அல்லாஹ் எப்படி சொல்கிறான் என்று கவனியுங்கள்..

நிச்சயமாக அவள் விருப்பம் கொண்டாள். (அதில் எந்த மாற்றமும் இல்லை)
அவரும் விருப்பம் கொண்டார் என்பதை ”வ” (and) என்ற வார்த்தையை போட்டு அல்லாஹ் பிரிச்சிட்டான்.
ஏனெனில் இரண்டு பேரும் கொண்டது ஒரே மாதிரியான விருப்பம் கிடையாது.
ஏன் கிடையாது?
அதற்கு பின்னர் விளக்கம் சொல்கிறான்..
அவருடைய இறைவனிடமிருந்து வந்த ஆதாரத்தை அவர் பார்த்தார்.

இதற்கு அடுத்து வருகின்ற 25வது வாக்கியத்தின் முதல் செய்தியை மட்டும் படியுங்களேன்..
வஉஸ்தபக ல்-பாப - And they both ran/raced towards the door - அத்துடன் அவர்கள் இருவரும் கதவை நோக்கி (ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு) ஓடினார்கள்.

இங்கே பார்த்தீர்கள் என்றால், இரண்டு பேரும் ஓடினதை இருவரும் ஓடினார்கள் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டான். அவர் ஓடினார். அவள் ஓடினாள் என்று சொல்லவில்லை. 

அப்போ (நாம படிச்சிக்கிட்டு இருக்கின்ற) இந்த 24வது வாக்கியத்தை எப்படி தமிழாக்கம் செய்யப்பட வேண்டும் என்று இந்த 24வது வாக்கியமும் 25வது வாக்கியமும் suggest செய்கிறது என்றால்,
”நிச்சயமாக அவள் விருப்பம் கொண்டாள்..
அவர் தன்னுடைய இறைவனுடைய ஆதாரத்தை கண்டிராமல் இருந்திருந்தால் அவர் விருப்பம் கொண்டிருப்பார்” என்று தான்.
அவர் விருப்பம் கொள்ளவே இல்லை என்பதற்கு தொடர்ந்து வரும் சொற்களும் அழகாக சொல்கிறது...

கதாலிக - Thus, - இப்படியாகத்தான்
லிநஸ்ரிஃப - that, We might avert - நாம் விலக்கிவிட்டோம்
அன்ஹு - from him - அவரிடமிருந்து
அஸ்ஸுவஅ - the evil - தீயவைகளை
வஉல்ஃபஹ்ஸாஅ - and the immorality. - மானக்கேடான செயல்களை
”இப்படியாகத்தான் நாம் அவரிடமிருந்து தீயவைகளையும் மானக்கேடான செயல்களையும் அவரிடமிருந்து விலக்கிவிட்டோம்” என்று சொல்கிறான்.
என்ன அழகாக சொல்லப்பட்டிருக்கிறது...!
நல்லா கவனிங்க... மிக நுணுக்கமாக கவனிக்க வேண்டிய செய்தி

கம்ப்யூட்டர், வைரஸ் இவைகளை வைத்து இரண்டு செய்திகள் ஓரு உதாரணத்துடன் சொல்கிறேன்.
முதல் செய்தி:
கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கி விட்டது. ஆகையினால் தாக்கப்பட்ட கம்ப்யூட்டரை வைரஸிலிருந்து விடுவிப்பது.
இந்த முறைப்படி சொல்வதென்றால்... இப்படி சொல்ல வேண்டும்....
நாம் (அல்லாஹ்) தீயவையும் மானக்கேடானவையிலிருந்தும் யூசுப் அலைஹிஸ்ஸலாத்தை விலகிவிட்டோம்.
Allah removed Yusuf alaihissalaam from evil and shamelessness
இது எப்படி என்றால் தீயதையும் மானக்கேடானதையும் யூசுப் அலைஹிஸ்ஸலாம் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள், அல்லாஹ் அவர்களை விலக்கி விட்டுவிட்டான்.

இரண்டாவது செய்தி:
கம்ப்யூட்டரை வைரஸ் தாக்க இருந்தது. ஆனால் அந்த கம்ப்யூட்டரை தாக்குவதற்கு முன்பாகவே ஏதோ ஒரு வெளியில் உள்ள கருவி மூலமாக விலக்கப்பட்டது.
இந்த முறைப்படி சொல்வதென்றால்... இப்படி சொல்ல வேண்டும்...
நாம் (அல்லாஹ்) யூசுப் அலைஹிஸ்ஸலாத்திடமிருந்து தீயதையும் மானக்கேடானதையும் விலக்கி விட்டான்
Allah removed evil and shamelessness from Yusuf alaihissalaam
இது எப்படி என்றால் தீயதும் மானக்கேடானது என்ற ஷைத்தான்கள் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றிப் பிடிக்க வந்தது, அல்லாஹ் அவைகளை விலக்கி விட்டான்.

அல்லாஹ் இந்த வாக்கியத்தில் எப்படி சொல்கிறான் என்று நன்றாகவே தெரிகிறது. இரண்டாவது செய்தியில் உள்ள உதாரண முறைப்படி தான் சொல்கிறான்.

அல்ஹம்துலில்லாஹ்..! 
ஆக, மொத்த வாக்கியத்தை எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றால்..

தீயவைகளும் மானக்கேடான செயல்களும் யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை அடைய வந்தன..
அல்லாஹ் அவைகளை யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை அடைய விடாமல் அதை விலக்கிவிட்டான்.
யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அப்படி அல்லாஹ் தட்டி விடுவதை கண்டார்கள்.
அல்லாஹ் அப்படி தட்டி விடவில்லை என்றால்..
அது அவர்களை அடைந்திருந்தால் அவர்களும் விருப்பம் கொண்டு தானிருப்பார்கள்..

அல்லாஹ் எந்த அளவுக்கு யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை தூய்மையாக அடையாளப்படுத்தியிருக்கிறான் என்று நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

கடைசியாக ஒரு செய்தி..
யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர்களாவது, யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உடலை தான் கிணற்றின் கீழே இறக்கினார்கள்.

ஆனால் இந்த கேடு கெட்ட உலக அறிஞர் யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் characterஐயே கீழே இறக்கி விட்டர்.
இந்த தீய மானக்கேடான காரியத்தை செய்தவரின் வாடை கூட நம்மீது படாமல் நம்மை பாதுகாக்க இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம்.