Sunday, August 4, 2019

மூஸா நபி அலைஹிஸ்ஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் ஹஜ்ஜுடைய காலம்

28. ஸூரத்துல் கஸஸ்(வரலாறுகள்) - ஆயத் 22லிருந்து 27வரை (நேரடி மொழி பெயர்ப்பு அல்ல)

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்திலிருந்து மத்யன் எனும் நகருக்குள் நுழைகிறார்கள். அங்கே ஆண்கள் பலர் தமது ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட வேண்டி தண்ணீரை கிணற்றுக்குள் இருந்து இறைத்து கொண்டிருக்கிறார்கள். சற்று தள்ளி, இரு பெண்கள் தமது ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட வேண்டி ஒதுங்கி நின்று கொண்டிருக்கிறார்கள்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த இரண்டு பெண்களிடம் விபரம் கேக்க அவர்களோ, தாங்கள் அந்த ஆடு மேய்ப்பவர்களான ஆண்கள் அவர்களது ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டி முடியும் வரை தாங்கள் எடுக்க முடியாது என்றும் அவர்களது தந்தை வயோதிகர் என்றும் கூறுகின்றனர். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்த ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டுகிறார்கள்.

உதவியவுடன் நிழலில் ஒதுங்கி,”என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் ஒரு ஃபகீராக இருக்கின்றேன்” என்று துவா செய்கிறார்கள்.

பிறகு அந்த இரு பெண்களும் தமது வயோதிகமடைந்த தந்தையிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் பற்றி கூறுகிறார்கள். அந்த தந்தையோ தமது இரு மகளில் ஒரு மகளை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து வருமாறு கோருகிறார்கள்.

அந்த பெண் நாணத்துடன் மூஸா நபியவர்களிடம் வந்து, “எங்களுக்காக நீங்கள் தன்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்கள்” என்று கூறுகிறார்கள்.

மூஸா நபி அவர்களுடன் அவர்களுடைய இல்லம் வந்தடைந்து அவர்களின் தந்தையிடம் தாம் எகிப்திலிருந்து மத்யன் வந்ததற்கான காரணத்தை ஒன்று விடாமல் தாம் எகிப்தி ஒருவரை எவ்வித நோக்கமும் இல்லாமல் கொலை செய்தது உள்பட எல்லாவற்றையும் சொல்கிறார்கள்.

அதற்கு அந்த இரு பெண்களின் தந்தை, ”பயப்படாதீங்க! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்து விட்டீர்” என்று பதில் கூறினார்கள்.

அப்போது அவர்களின் இரு மகள்களில் ஒருவர், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது விருப்பமுள்ளவர்களாக, தமது தந்தையிடம், “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் வேலைக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.” என்று கூறுகிறார்கள்.

தந்தை மகளின் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மீதான விருப்பத்தை உணர்ந்தவர்களாக, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம், “நீங்கள் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உங்களது விருப்பம், நான் உங்களுக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்கள்’ என்று கூறுகிறார்கள்.

28. ஸூரத்துல் கஸலில் வரும் 27 வது ஆயத்

قَالَ اِنِّىْۤ اُرِيْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَى ابْنَتَىَّ هٰتَيْنِ عَلٰٓى اَنْ تَاْجُرَنِىْ ثَمٰنِىَ حِجَجٍ‌ۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ‌ۚ وَمَاۤ اُرِيْدُ اَنْ اَشُقَّ عَلَيْكَ‌ؕ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِيْنَ‏

மேலே  உள்ள ஆயத்தில் 8 ஆண்டுகளை பற்று குறிப்பிடும் போது “ஆண்டு” எனும் பதத்திற்கு  ”ஸனதுன்” அல்லது ”ஆமுன்” அல்லது “ஹவ்லுன்” என்ற பிற வார்த்தைகளை பயன்படுத்தாமல்  “ஹிஜஜின்” என்ற வார்த்தையை அந்த தந்தை பயன்படுத்தியதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

இந்த வார்த்தை ”ஹஜ்ஜுன்” என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. அதாவது இது வருடத்திற்கு ஒரு முறை வரும் ஹஜ்ஜு யாத்திரையை குறிக்கும். அதாவது எட்டு ஹஜ் சீஸனுக்கு நீங்கள் எனக்காக வேலை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.

அதாவது கஃபாவை பற்றியும் ஹஜ் யாத்திரையை பற்றியும் அந்த தந்தைக்கும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது என்று நம்பலாம். இதிலிருந்து யஹீதிகளுக்கும் தெரிந்திருக்கிறது என்று நம்ப முடிகிறது.

ஆகையினால் தான் இறைவன் தமது திருமறையில் 2. ஸுரத்துல் பகரா 146வது வாக்கியத்தில் எவர்களுக்கு நாம் வேதங்களை கொடுத்தோமே அவர்கள் (யஹீதிகள்) தமது சொந்த மக்களை அறிவதைப் போல் (குரான் ஷரீஃபை - பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை) அறிவார்கள் என்று குறிப்பிடுகிறான்.

No comments: