Wednesday, February 6, 2019

ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம்

1

இந்த மாதம் ஜமாத்துல் ஆஹிர் மாதம். இந்த மாதத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது யாரென்று சொல்லவே தேவையில்லை... நம் கண்மனி பாதுஷா நாயகம்.

 எஜமான் என்று மிகுந்த முஹப்பத்தோடு நாம் அழைக்கும் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் தான்.

இவர்கள் ஹிஜ்ரி 910, ஜமாத்துல் ஆஹிர் பிறை 10ல் பிறந்தார்கள்.

2

இவர்களின் உஸ்தாது முஹம்மது கௌது ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குவாலியர் என்ற ஊரில் வசித்தவர்கள்.

கௌது குவாலியர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் ஏராளமானவர்கள் தஸவ்வுஃப் ஞானம் பயின்று வந்தாலும் குறிப்பாக இரண்டு பேர்கள் பிரசித்தி பெற்றவர்கள். ஒன்று நம் எஜமான் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகமவர்கள். மற்றொன்று அக்பர் அவையில் மாபெரும் சிறந்த இசைகலைஞராக விளங்கிய தான்சேன் என்பவர்.

அவர் வெள்ளைக்காரர் என்றும் இஸ்லாத்திற்கு வந்தவர் என்றும் நான் எனது உஸ்தாது வாய் வழி கேட்ட செய்தி உள்ளது.

3

எஜமான் என்றதும் நம் உடனே அவர்களிடம் எதையாவது கேட்டு பெறுவதிலேயே நமக்கும் எஜமானுக்குமான தொடர்பு நின்று விடுகிறது. அல்லது அப்படி கேட்பது ஷிர்க்காகி விடுமோ என்று உலக அறிஞரின் (பிஜே) கூற்றின் இன்ஃபுலியன்சில் மனதில் புகுந்த கேள்விக்கு பதில் தேடுவதிலேயே காலம் கடந்து கொண்டிருக்கிறது.

4

எஜமான் எப்போதும் கடற்கரைக்கு செல்வது வழக்கம். அப்போது செல்லும் போது வழியில் ஒரு ஏழை முஸாபிர் வாசலிலேயே உட்கார்ந்து இருப்பார்.

அவருக்கு ஒரு முறை அவர்களின் மகனார் யூசுஃப் தாதாவிடம் “நீங்கள் எடுத்து போய் அவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வாருங்கள்” என்று சொல்கிறார்கள்.

சின்ன எஜமான் அவர்கள் “அவருக்கா..?” என்பது போல் கேட்க, வந்ததே கோபம் பெரிய எஜமானுக்கு, “ஏன் அவர்க்கு என்ன... அப்படி இருப்பது தவறில்லை.. நீங்கள் நினைத்ததில் தவறு உள்ளது.. போங்கள்.. போய் கொடுத்து விட்டு வாருங்கள்..” என்று கடிந்து பக்குவப்படுத்தினார்கள்.

இன்னைக்கும் தர்ஹாவை கடக்கும் போது முஸாபிர்கள் இருப்பார்கள். அவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வது எஜமானுக்கு பிடிக்காது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

5

சாப்பிடும் போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போலவே இவர்களும் பேச மாட்டார்கள்.

6

நம் நாகூரில் மட்டும் 28 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்கள். மீனவர்களோடு மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். அவர்கள் ஏற்றி வைத்த விளக்கு தான் இன்னமும் எஜமானின் தலைமாட்டில் எரிந்து கொண்டிருக்கிறது.

7

அவர்கள் ஹிஜ்ரி 978 ஜ்மாத்துல் ஆஹிர் பிறை 10ல் அதிகாலை 4:20 மணிக்கு வஃபாத்தானார்கள்.

ஆசரஹான் என்ற இடத்தில் எஜமானின் உடலை வைத்து மழை நீரில் தான் கழுவினார்கள்.அந்த தண்ணீர் சேர்ந்த இடம் தான் தர்கா குளம்.

பீர் மண்டபம் என்ற இடத்தில் வைத்து தான் ஜனாசா தொழுகை நடத்தப்பட்டது. பின்னாளில் போர்ச்சுகீசியர்களும், டச்சுக்காரர்களும் தான் பீர் மண்டபத்தை கட்டிக் கொடுத்தார்கள். போர்ச்சுகீசியர்களும் டச்சுக்காரர்களும் இந்தியாவிற்கு வரும் போது முஸ்லிம்களுக்கு சொல்லொணா துன்பமிழைத்தார்கள், அந்த அட்டூழியங்களை எதிர்த்து போராட குஞ்சாலி மரைக்காயரை தயார் செய்து போருக்கு அனுப்பியவர்கள் எஜமான் அவர்கள். அத்தகையவர்களே எஜமானை புரிந்து கொண்டு பீர் மண்டபத்தை கட்டிக் கொடுத்தார்கள்.

8

எஜமான் அவர்கள் வஃபாத்திற்கு பிறகு அவர்களின் சீடர்கள் 404 பேரும் பான்வா, மலங்கு,மதாரி, ஜலாலி என்றும் பல குழுக்களாக பல ஊர்களுக்கு அடுத்த ஆண்டு வஃபாத்தான நாளில் சந்திப்பது என்ற நிய்யத்தோடு பிரிந்து சென்றனர்.

அடுத்த வருடம் அவர்களின் வருகையை எண்ணி சின்ன எஜமான் அவர்கள் அரிசி, பருப்பு, கறி, நெய், விறகு, எண்ணெய், காய்கறிகள், பாய்கள், தென்னங்கீற்றுகள் இன்னும் வேண்டியவை அனைத்தையும் தயார் செய்து வைத்து காத்திருந்தார்கள்.

சொன்னது போலவே கூட்டம் கூட்டமாக மக்கள் அதே நாளில் வந்தார்கள்.

எல்லோரும் ஃபக்கீர்மார்கள். ஏழைகள். வந்து தொழுதார்கள், ஓதினார்கள்,

ரிலாயத் எனும் எஜமான் கற்றுக் கொடுத்த பயிற்சியை மேற்கொண்டார்கள்.

இன்னமும் அந்த நான்கு பிரிவினரும் வருகிறார்கள், அவர்கள் திரும்பி செல்லும் போது மேற்சொன்ன அத்தனையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தான் கந்தூரி.

9

நீங்கள் எங்கிருந்தாலும் அந்த ஜமாத்துல் ஆஹிர் பிறை 10ல் 4 மணி முதல் 4:40 வரை எஜமானுடைய தரீக்காவில் உள்ளதை நல்ல ஆலிமுடன் கன்சல்ட் பண்ணி உட்கார்ந்து ஓதிக் கொண்டிருக்க வேண்டும் என்று எங்கள் ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் அவர்க்ள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அப்படி ஓதும் போது எஜமானின் மக்பரா ஷரீஃபை மனக்கண் முன் நிறுத்த வேண்டும் என்பதும் உத்திரவு.

10

சின்ன எஜமான் அவர்களுக்கு கவிதை எழுதும் வழக்கம் இருந்தது. அவர்க்ளின் கவிதையில் எஜமானை பற்றி அவர்களின் உணவு பழக்கம், படுக்கும் முறையை பற்றி எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் கவிதையில் பாடி பதிவு செய்யவில்லை என்றால் அவர்களின் நடைமுறை யாருக்குமே தெரிந்திருக்க நியாயமில்லை.

11

நாகூர் தர்ஹாவின் நாலாபுறமும் பள்ளிவாசல். நவாப் பள்ளி, சின்ன ஹொத்துவா பள்ளி, பானா சாபு பள்ளி மற்றும் திவான்ஷா பள்ளி.

12


No comments: